நீங்கள் கணிக்க முடியாத பெரும் வெடிப்பைக் கக்கும் எரிமலைப் போல ஒருநாள் நாங்கள் எங்கள் தனித் தமிழீழத்தை அடைந்தே தீருவோம். மண்ணின் விடுதலைக்கு உயிரொளி தந்து மறைந்த எங்கள் மாவீர தெய்வங்களுக்கு வீர வணக்கம்.
2026 சட்ட மன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் விபரம்
செந்துறை வட்டம் ஆலத்தூரில் இயங்கி வரும் ராம்கோ சிமெண்ட் ஆலையில் நிலம் கொடுத்த மக்களுக்கு வேலை . பணியில்இறந்து போனவர்கள் வாரிசுகளுக்கு வேலை கேட்டும், அரசு சிமெண்ட்ஆலையில், டால்மியா சிமெண்ட் ஆலையில் இருப்பது போல் மருத்துவமனை அமைக்க கேட்டும், சி எஸ் ஆர்தொகையினை முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு பயன்படுத்த கோரியும், ராம்கோ சிமெண்ட் ஆலையில் இயங்கி வரும் சிபிசி பள்ளியில் இலவச கல்வி கேட்டும் மற்றும் பத்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி இன்று ராம்கோ சிமெண்ட் ஆலையின் முன்பாக தமிழ்ப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டல செயலாளர் மக்கள் காவலர் கு.முடி மன்னன் அவர்கள் தலைமையில் மாபெருக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் மக்கள் போராளி வ. கௌதமன் அவர்களும், மாநில அவைத்தலைவர் வழக்கறிஞர் சரவணன் அவர்களும் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், ஊர் பொதுமக்களும், தாய்மார்களும், நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு ஆலைக்கு எதிராக முழக்கமிட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் டிஎஸ்பி அவர்கள் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு அசம்பாவிதம் ஏற்படாமல் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
இந்த ஆண்டில் நிகழ்வுகள் ஏதுமில்லை.